top of page

அருளொளி மார்க்கத்தின் ஒரு சுருக்கமான வரலாற்று பின்னணி

சத்குரு ஜெகந்நாத சுவாமிகள்

இராமலிங்க அடிகளார் (வள்ளலார்) பிறப்பதற்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜெகந்நாத சுவாமிகள், தை மாதத்தில் கல்கத்தா, இந்தியாவில் அமைந்திருக்கும் பூரி என்ற ஊரில் 1814-ஆம் ஆண்டு பிறந்தார். இராமலிங்க அடிகளின் கொள்கைகளைப் பின்பற்றிய ஜெகந்நாத சுவாமிகள், தனது பதினெட்டாவது வயதில் இந்தியாவிலிருந்து சிட்டகாங்கிற்கும், பின்னர் தாப்பா மலேசியாவில் சுமார் 1920ஆம் ஆண்டில்  குடியேறினார். ஜெகந்நாத சுவாமிகள் 145 ஆண்டுகள் வாழ்ந்தார். ஜனவரி 25, 1959-ஆம் ஆண்டு தைப்பூசத்தன்று அதிகாலை 4.30 மணிக்குச் சுவாமிகள் தாப்பாவில் ஜீவ சமாதி அடைந்தார்கள். ஜெகந்நாத சுவாமிகளின் சீடர்களில் ஒருவர் பனைக்குளத்தைச் சேர்ந்த சித்ரமுத்து அடிகள் ஆவார்கள்.

IMG-20171206-WA0057 (1).jpg

சத்குரு தவத்திரு சித்ரமுத்து அடிகள்

சித்ரமுத்து அடிகள் ராமநாதபுரத்தில் உள்ள பனைக்குளத்தில் 1900-ஆம் ஆண்டு பிறந்தார். முத்து மலாயாவிற்கு 1992-ஆம் ஆண்டு கிளம்பி பேராக்கின் கோலா கங்சாரில் தங்கினார். அவர் தாப்பாவில் ஜெகந்நாத சுவாமிகளைச் சந்திக்க இறைவனால் நிச்சயிக்கப்பட, ஜெகந்நாத சுவாமிகளும் முத்து என்பவரை தன் சீடராக்கி, அவருக்கு சித்ரமுத்து என தீட்சா நாமம் சூட்டினர்.

சித்ரமுத்து தனது உண்மையான சுயத்தையும், தனது முழுத் திறனையும், வாழ்க்கையில் தனதுபணியையும் உணர ஜெகந்நாத சுவாமிகள் குருவாக இருந்து உதவினார்.

Chirtamuthu Main Pic.jpg
IMG-20210304-WA0052.jpg

Empowerment

மலாயா மற்றும் தமிழ்நாட்டில் சீடர்கள்

1974ஆம் ஆண்டு சித்ரமுத்து அடிகள் அவரைத் தங்கள் குருவாகக் கருதிய ஏராளமான மலாயாவில் உள்ள சீடர்களை ஆசிர்வதித்து இந்தியா புறப்பட்டார். இந்தியாவில் ஜீவ காருண்யத்தை உபதேசித்தார்கள். அவர் தனது வீட்டைப் பொதுமக்களுக்காகத் திறந்து அதற்கு அருளொளி மடம் என்று பெயரிட்டார். அங்கு அவர் சொற்பொழிவுகளை ஆற்றத் தொடங்கினார். பின்னர், மீண்டும் 1951- ஆம் ஆண்டு மலாயாவிற்கு வந்த சித்ரமுத்து அடிகள் பினாங்கில் உள்ள அருளொளி ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலில் பிரசங்கம் செய்தார்.  

aa.jpg

மலேசியாவில் தவம்

பினாங்கு மலையில் உள்ள முருகன் கோவில், ஈப்போவில் உள்ள மகா மாரியம்மன் கோவில், கோர்ட்டு மலை பிள்ளையார் கோவில், பிரிக்ஃ பீல்ட்ஸில் உள்ள கந்த சுவாமி கோவில், செந்தூலில் உள்ள ஆதி  ஈஸ்வரன் கோவில், ஜாலான் பண்டரில் உள்ள மகா மாரியம்மன் கோவில், ஜாலான் சுங்கை பெசியில் உள்ள சிவன் கோவில், கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூரில் உள்ள மாரியம்மன் கோவில்களில் தவமும் சத்சங்கக்களும் நடத்தி உள்ளார்கள்.

அருளொளி மார்க்கம் நிறுவுதல்

இந்தியாவிலும் மலாயாவிலும் பல அருளொளி மார்க்க சபைகளை நிறுவினார். அவர் தமிழில் எழுதியுள்ள பல பாடல்கள், பின்னர் அருளொளி என்ற நூலாகத் தொகுக்கப் பட்டது. குருமதிமாலை, திருப்புகழ் திரவியம், பேரின்பக் குறள்,மௌநானந்த மணி மொழிகள், மரணச் சிந்தனை, ஞானப் பண்டிதன், நிறை நெறி மொழிகள், சீர் திருந்து மனிதா, கருணைக் கண்ணீர்,கிருபை பிரகாச பொக்கிஷம், அருளொளி மலர், காந்தியின் திருவருட் புலம்பல் ஆகியவை சித்ரமுத்து அடிகள் எழுதிய நூல்கள் ஆகும்.

ஆத்ம சாந்தி நிலையத்தை நிறுவுதல்

 

1958-இல் அழகன் குளத்தில் ஆத்ம சாந்தி நிலையம் நிறுவப்பட்டது. ஆத்ம சாந்தி நிலையம் தாய் வீடு எனப் பெயர் பெற்று தீப தரிசன திருவிழா ஆண்டு தோறும் 7-ம் நாள் சித்திரை மாதம், சித்ரமுத்து அடிகள் பிறந்த தினத்தை நினைவு கூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.

மலேசியாவில் துன் வி.டி சம்பந்தன் தலைமையில் 1960-இல் அருளொளி மன்றம் உருவாக்கப்பட்டது. மலேசிய அரசாங்கம் ஈப்போவில் ஒரு நிலத்தை நன்கொடையாக வழங்கி, அங்குக் கட்டிடம் கட்டி முடிந்ததும் அப்போதைய பேராக் மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ ஹாஜி கமருடின் பின் ஹாஜி ஈசா அவர்களால், 11 பிப்ரவரி 1973-ஆம் ஆண்டு திறப்பு விழா கண்டது. அருளொளி மார்க்கம் அதன் பின்னர் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் லண்டன் ஆகிய நாடுகளில் நிறுவப்பட்டது.

IMG-20210304-WA0051.jpg

சமாதி மண்டபம் கட்டுதல்

 

1991-ம் ஆண்டு சமாதி மண்டபம் கட்டி முடித்து சிவ ஸ்ரீ முத்துக்குமார சிவாச்சாரியார் 1991-ம் ஆண்டு சிவராஜ கோபுரத்தில் கும்பாபிஷேகம் நடத்தினார். சத்குரு தவத்திரு சித்ரமுத்து அடிகள் ஞாயிற்றுக்கிழமை மே 5, 1995 அன்று கேசரி முத்திரை இட்டு மகா சமாதி அடைந்தார்கள். சத்குரு தவத்திரு சித்ரமுத்து அடிகளாரின் விரிவான வாழ்க்கை வரலாறு, அவர் எழுதிய வாழ்க்கை விளக்கம் எனும் அத்தியாத்தை அருளொளி புத்தகத்தில் படித்து மேலும் தெரிந்துக் கொள்ளலாம்.

IMG-20170815-WA0041.jpg

மலேசிய  அருளொளி நற்பணி மாமன்றத்தின் உருவாக்கம்

சத்குரு தவத்திரு சித்ரமுத்து அடிகளார் போதனைகள் மற்றும் அவரது சீடர் அருளொளி நன்மகன் ஆத்மநாதன் அடிகளின் வழிகாட்டுதலின் அடிப்படையில் 2019 ஜனவரியில் மலேசிய அருளொளி நற்பணி மன்றம், மலேசியா அரசாங்கத்தின் சங்கப் பதிவு இலாகாவின் கீழ் அதிகாரப்பூர்வமாக Dr. தேவன் இராமநாதனால் பதிவு செய்யப்பட்டது. ஐந்து ஆண்டுகள் சேவைக்குப் பிறகு, 2024 ஆண்டு பொதுக்கூட்டத்தில், மலேசிய அருளொளி நாற்பனி மன்றம் என்ற பெயர் "மலேசிய அருளொளி நாற்பனி மாமன்றம் என மாற்றம் கண்டது."

bottom of page